வியாழன், அக்டோபர் 08, 2020

வாழ்வின் சந்நிதானத்தில்

 கூச்சமாக இருக்கிறது பட்ட காலிலே பட்டுக்கொண்டிருப்பவரிடம் இதுவும் கடந்து போகும் எனத் தத்துவம் சொல்லி நகர *********************************************

நிறைய பேசினோம்
ஊர் நிலவரம்
வீட்டிலிருந்த காலொடிந்த நாய்
கிணற்றில் பூனை விழுந்து தூக்கியது
பட்டு டீச்சர் வைத்திருந்த பிரம்பு
ராமு மாமா சைக்கிள் அலங்காரங்கள்
கூடப்படித்த ரவி சேர்மன் ஆனது
என்றெல்லாம்
ஏதாவது வேண்டுமா எனக் கேட்டிருக்கலாமோ **********************************************
எத்தனை முயன்றும்
கப்பல் செய்யத் தெரியவேயில்லை
கோபித்துக்கொண்டு போன மழை போனதுதான்
நான் வேண்டுமானால் மிதக்கிறேன்
உன் உள்ளங்கையில் தண்ணீரேந்து
என்று ஆறுதல் கூறி முகம் பார்க்கிறது சிற்றெறும்பு

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...