செவ்வாய், ஏப்ரல் 20, 2021

தரும மருமம்

 நசுங்கிப்போன பித்தளை கூஜாவைப் போட்டுவிட்டு எவர்சில்வர் கூஜா வாங்கிவந்தபோதே வீட்டில் அவ்வளவு வரவேற்பில்லை

அன்று
பள்ளியில்
ரயிலடியில்
தெருமுனையில்
மைதானத்தில்
குழாய்களில் கைகுவித்துப் பருகுவதில் தயக்கமில்லை
தயங்குபவர்க்கு
அருகமை வீடுகளில்
ஒரு லோட்டா தண்ணீர் உபசாரமுண்டு
நூற்றிலொரு குழந்தை
தோளில் நாடா தொங்க பிளாஸ்டிக் குடுவைகளோடு பள்ளி வந்த அதிசயம் தொடங்கியது
தங்கம் கூடத் தருவார்
தண்ணீர் தரமாட்டாரென்ற வாழ்வு நிலைப்பட்டு விட்ட மண்ணில்
தண்ணீர்ப்பந்தலும்
தர்மமல்ல
போத்தல்களில்
குடுவைகளில்
விற்ற நீரை
ஆற்றோடு
குளத்தோடு
அரசுகளே விற்கும் காலம்
கூஜாவைப் படம் போட்டு
பார்த்திருக்கிறாயா எனக் கேட்கிறது இணையம்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...