செவ்வாய், ஏப்ரல் 20, 2021

கடன் வாங்கிக் கழித்த காலம்

 சுற்றிலும் கனத்த மௌனம் பனிக்கட்டியாக உறைந்திருக்கிறது

இழந்த உறவு
இப்போதில்லை
முன்பே இழந்ததுதான்
ஆனால்
இப்போதைய இழப்பைதான் எல்லோரும் இழப்பு எனக் கருதுகிறார்கள்
அவளைப்பற்றி இல்லை
அவர்களைப்பற்றி
சுகந்தமும் முள்ளும்
முற்றிலும்
அவளுடையதாக
இருந்த நாட்களை
எப்போதோ
கிழித்தெறிந்தாயிற்று
தூலமாக இல்லாத
உறவுக்கு
பிரிவைச் சொந்தம் கொண்டாட நாரில்லை
ஆனாலும்
செய்தி
சொட்டுச் சொட்டாக அவளைச்சுற்றி
விழுந்ததும்
உறைந்ததும்
உண்மை
அப்படியே தன்னை உருவிக்கொண்டு மேலெழுந்துவிடுவாள்
என்றுதான் கடக்கிறார்கள்
அவளுக்கும் அதுதான் கணக்கு
இறந்தகாலமென்பது
கடன் வாங்கிக் கழித்தல்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...