செவ்வாய், ஏப்ரல் 20, 2021

சம்பிரதாய சந்தோஷங்கள்

 எப்போதும் உண்டுதானே சில சம்பிரதாயங்கள்

எதைச் சொன்னாலும்
சரிதான்... ஆனாலும்
என்றொரு பிடிமானத்தைப் போட்டு வைப்பது
எல்லோரும் அடுத்த சொல்லுக்காக முகம் பார்த்திருக்கையில்
நிதானமாக நீர்பருகி
தொண்டை செருமி
தொடர்பற்று தொடர்வது
உள்ளதைச் சொல்லப் போவதில்லை என்றாலும்
என்னைப்பற்றி
என்ன நினைக்கிறாய் எனக் கேட்பது...
சரி
சம்பிரதாயத்தை
நாம் முறிப்பானேன்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...