செவ்வாய், ஏப்ரல் 20, 2021

கனவு இறக்கை

 ஒருவேளை

இறக்கை முளைத்தால்
என்ன செய்வாய்
முதலில் அந்த வேம்பின் தாழ்கிளையில் உட்கார்ந்து பம்பம்மென்று ஒரு ஆட்டு ஆட்டுவேன்
நீ அதட்டுவாய்
பின்
உன் கண்ணுக்கெட்டா தொலைவுக்குப்
பறந்து விடுவேன் ***********************************************
இங்கேதான் இருந்தது
இப்படி இல்லை
இப்படித்தான் தோன்றியது
அப்படி இல்லை
என்னோடுதான் நின்றாய்
இப்போது இல்லை ********************************************
நீல மெழுகுக்கடல்
சிவப்புக் கோடுகளால் ஒரு சூரியன்
கூர்நுனி கைவராத இலைகள்
ஏ பொன்வண்டே
கொஞ்சம் மகரந்தம் தூவி வையேன்
முடிக்காமல் தூங்கிப்போன பாப்புக்குட்டியின் நோட்டுப்பக்கத்தில் **********************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...