செவ்வாய், ஏப்ரல் 20, 2021

எண்கரத்தாள்

 கடிகாரத்தாலோ நாட்காட்டியாலோ புதிய நாள் புதிய காலம்

முகக் கவசத்தின் காதை
காதோடு தொங்கவிட்டுக்கொண்டு
பீடி பிடித்தபடி வம்பளந்து கொண்டிருக்கும்
பணியாளர் கூட்டம்
வியர்வையை முந்தானையால் ஒற்றிக்கொண்டு வாடிக்கையாளர் குரலுக்கெல்லாம் நீளும் எண்கரத்தாள்
காற்றிலாடும் நிறநிறநிறப் பொட்டலங்கள்
கிழமை தெரியாது சுழலும் இந்தக்காலம்தான்
நிகழ்காலம் அவளுக்கு
ஒருநிமிடம் இடைவெளி கொடுத்தீர்களானால்
அந்த தம்ளரில் ஆறிக்கிடக்கும்
தேநீரால் தொண்டையை நனைத்துக்கொண்டு கேட்பாள்
என்னங்க வேணும்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...