செவ்வாய், ஏப்ரல் 20, 2021

சிறு பள்ள மழைநீர்

 சொல்லிவிட்டதாகத்தான்

தோன்றுகிறது
உனை அடைந்துவிட்டதா
எனத் தெரியவில்லை
இன்றைய இடி மின்னலில்
ஒடிந்த கிளைகளைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்
ஏதோ ஒரு ஊர்வலத்தின் பூக்கள் சக்கரங்களில் ஒட்டிக் கொள்கின்றன
சிறு பள்ள மழைநீர் போதுமாயிருக்கிறது
அத்தனை பெரிய ஆகாயம் முகம் பார்க்க
நமக்குதான் எத்தனை போதாமை ************************************************
ஆம்
உன்னைத்தான்
நீஈஈண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்தேன்
உன் அடையாளங்களை
அறியாதவள் முன்
வந்து
போய்விட்டாயாமே
சிறு இரக்கம்
நெகிழ்நகை ஏதொன்றுமிலாது எப்படிக் கடக்க முடிந்தது உன்னால்
அவ்வளவு கல்மிஷமென்றால்
வந்தது நீயில்லை
அல்லது
தேடியது உன்னையில்லை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...