செவ்வாய், ஏப்ரல் 20, 2021

பிரம்ம சோம்பல்

 தீர்க்கமான மூக்கு கொண்ட ஒரு பெண்ணின் ஓவியம் உன் நினைவைக் கிளறியது நகைமுரண்

உன்னுடையது
படுத்தவாக்கில் இரு துவாரங்களுக்கும்
கோடாக இடம்விட்டு
முடிந்துவிட்டிருக்கும்
நிறம் கூடுதலாய் இருந்திருந்தால்
சைனாக்காரி என்றாவது சொல்லியிருப்பார்கள்
சப்பைமூக்கி என்பதைத்தவிர வேறெந்த வழியும் அவர்களுக்கில்லை
அந்த துவாரங்கள்
சற்றே பெரிதாயிருந்தால்
அந்தக்கோடு சற்றே உயர்ந்திருந்தால்
இந்த வாழ்க்கை
எவ்வளவு சுலபமாகப் போய்வந்திருக்கும்
உன் சுவாசத்தோடு
அந்த வழியில் குனிந்தபடி
நடக்க முடியுமென
நம்பியது ஒன்றுதான் இவன் தகுதி
நிமிராத மூக்கை வரைந்த பிரம்மனின் சோம்பேறித்தனத்தைச் சபித்தவாறே
உன் வாழ்வு முடிந்தது

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...