செவ்வாய், ஏப்ரல் 20, 2021

பிடிமானம்

 ஜிலுஜிலு ஓடையிலே ஹே ஹே

என்று பாடிக்கொண்டிருந்த பன்னீர் சித்தப்பா
இரண்டுநாளில் தீக்குளித்து செத்தார்
எல்லோரும் பன்னீரு நல்லவன் வல்லவன்
அதைக்கொடுத்தான்
இதைச் செய்தான்
என்றே புலம்பினார்கள்
அதென்ன என்காதில் மட்டும் விழுந்ததா
காலமெல்லாம்
ஓடையில் நெருப்பே மிதக்கும்படி *******************************************
இதென்ன இந்தப்பிடியா உனக்குத் திணறுகிறது
ஒற்றைவிரல் நீக்குகிறேன் போதுமா
இன்னொன்றும் எடுத்துவிட்டேன்
அட
மூன்றுவிரல்களை உன் கழுத்தில் பற்றியிருப்பது அசௌகரியமாய் இருக்கிறது
என் கைவலி நீ தாங்கமாட்டாய்
பழையபடியே
ஐந்துவிரல்களாலும்
பற்றிவிடுகிறேன்
இதுவும் எத்தனை கசகசப்புக்கிடையில்
என உணர்ந்தால்
நீ முகம் சுளிக்க மாட்டாய்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...