வியாழன், நவம்பர் 22, 2018

ஆறறிவுப் பக்குவம்


தற்செயலாகத்தான்
நடந்திருக்கும்
இப்போதுவரை அறியவில்லை
என்று உருகினான்
பழைய புத்தகத்துக்குள்
பதிந்து கிடந்த சிறு பூச்சிபார்த்து
மீன்பிடிக்க மாட்டிய சிறுபுழு
நூலில் கட்டிய தட்டான்
கல்லெறிந்த தெருநாய்
வண்டிபழகியபோது காலொடித்த ஆட்டுக்குட்டி
சந்தையில் விற்றுவிட்ட லட்சுமிப்பசு....
வரிசைகட்டிய கழிவிரக்கத்தில் 
கவனப்பிசகாகவும் சேர்ந்துவிடவில்லை
 இழிமொழியாலோ இடித்தோ
 தடவியோ 
பதறவைத்த எவளும்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...