புதன், நவம்பர் 07, 2018

நுனிக்காலில் நின்றாடும் பாப்புக்குட்டி

அரையே அரைக்கணப்புன்னகை 
கண்ணில் பட்டபோது அந்த சொர்க்கம் 
போதுமாயிருந்தது
தொட்டில் துணியோடு
மடித்து வைத்தபின்
பள்ளிவிண்ணப்பம் நிரப்பியாயிற்று


************************************************************
பதுங்கிக்கொள்ளும் அளவு 
இடம்தராதவற்றையும் 
குகை என்றழைப்பது
இதில் வள்ளல் பட்டம் வேறு


************************************************************


துயில்கலைவதன் அடையாளமா 
புறப்பட வேண்டிய ஆயாசமா
பொருள் புரியாவிடினும்
எனக்கு சமிக்ஞை
பறந்துவிட்டது குருவிக்கூட்டம்
வந்துவந்து சிரித்துவிட்டுப் போகிறது அணில்
ஆகவேண்டியதைப் பார்க்கலாம்


*********************************************************
புதியபொம்மை காட்டும் 
அப்பாவின் உயரத்தை அண்ணாந்து 
வியப்பும் குதூகலமும் பொலிய 
நுனிக்காலில் நின்றாடுவாள்
பாப்புக்குட்டி
நானோ ஒருநாள்போல
பால் பாக்கெட்டோடு உள்ளே திரும்புகிறேன் கதிர்பார்த்து



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...