வெள்ளி, நவம்பர் 09, 2018

பூந்துடைப்பம்

ரத்தத்தின் நிறமுள்ள பூக்களும் மணக்கின்றன 
ரத்தத்தையும் பூந்துடைப்பத்தால் ஒருமுறையும் 
தென்னை ஓலை வாரியலால் 
இன்னொருமுறையும் 
ஒட்ட ஒட்டக் கழுவித்தள்ள முடிந்தவர்கள் மத்தியில் 
ரத்தத்தின் நிறமுள்ள பூக்கள் 
ரத்தவாடை கொண்டிராது 

மணக்கின்றன அற்புதம்போல்

அபத்தமான சொற்களைக்கூட்டி
அமரகாவியத்தை எழுதிவிடவும் முடிகிறது
அபத்தத்துக்கும்
அமரத்தன்மைக்கும் கோடு 

எங்கே என உணராமலே
நீயும் இசைகூட்டுகிறாய் 


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...