சனி, நவம்பர் 03, 2018

நேற்று என்றொருநாள்


கண்பிய்ந்து வரும்படி தேய்த்துத் 
தேய்த்து துடைத்த நேற்று
எரிகற்களைப் பிடித்துப் பிடித்து
வெந்த உள்ளங்கையிலிருந்தே திருப்பி வீசிய நேற்று
தெள்ளிய நோக்கமே இதுவென
பொறுக்கிப்பொறுக்கி தோல்நீக்கி ஊதி 
நிலக்கடலை பங்குவைத்த நேற்று
புழுக்கத்தையெல்லாம் கொட்டிய நேற்று
கரப்பான் பூச்சிகளுக்கு மருந்தடித்த நேற்று
நாணயம் சுண்டிப் பயணித்த நேற்று
தலைசுமந்த குடங்கள் 
தளும்பாது நடந்த நேற்று
சுவர்களின் கரிவசவுகளைக் 
கண்கசக்காது கடந்த நேற்று
எல்லா நேற்றிலும் இருந்த நீ
எல்லா நாளையிலும் இருந்தாய்
இல்லாமல் போன நாளைகளும் 
இப்போது நேற்றாகிப்போயின
நேற்றிலிருந்து வெளியில் வருவதா
நேற்றிலேயே இருப்பதா 
குழம்பிக் கொண்டிருக்கையிலேயே 
நாளை நேற்றாகிவிடுகின்றது


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...