வியாழன், நவம்பர் 22, 2018

உடலாகிய உயிர்

அந்தக் கடலின் அலை உயர எழும்பியபோது 
அம்முக்குட்டி அதில் தெரிந்தாள்
மரக்குதிரை மேலேறி வாய்கொள்ளாச்சிரிப்புடன் 
முன்பின்னாக ஆடிய தோற்றம்

கடற்கரை ஓரத்தின் ஐஸ்வண்டி மணியை 
ஆட்டிவிட்டபடி தலைசாய்த்து
குச்சியா கப்பா என நோட்டம் விடுவது அம்முதான்

இங்கே நடக்காதீர் பலகை பார்த்து 
எச்சரிக்கையாக
பூங்கா பாதைக்குள் மட்டும் 
குதித்தபடி நடக்கும் அம்மு

எங்கு திரும்பினும் ஏதாவது ஒரு அம்மு
ஏதாவது அழகில் எதிர்ப்படுகிறாள்
எப்படி முடிகிறது
அம்முவைப்போய் உடலாய்ப்பார்ப்பது 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...