வியாழன், நவம்பர் 22, 2018

பறத்தல்-இருத்தல்

ஆரஞ்சா மஞ்சளா இது
வண்ணத்துப்பூச்சி
சம உயரச்செடியின் மலர்மேல் 
அலைகிறது
அரவமின்றிக் குனிகிறேன்
புறங்கை வீசித்துரத்துகிறது
ஒருமுறையேனும்
பறந்துவிட்டு வா



**************************************************************














செதுக்கிய யுகந்தாண்டி
தெறித்த துகள்கள் மிதித்து மிதித்து
எடுத்தெறிகையில்
எதிர்ப்படவேயில்லை
உறைந்த சிலையழகு



*******************************************************



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...