சனி, நவம்பர் 03, 2018

விம்மும் மனதின் ஒலி

பச்சையா நீலமா கறுப்பா என்று
கண்டுபிடித்துவிட
முடியாதபடி 
சலனமின்றி 
சிறு ஒளியை அருந்திய
இந்த ஆற்றுக்கு அக்கரையில்
நீயும் அப்படித்தான் இருக்கிறாய்
விம்மும் மனதின் ஒலியைப்
புறந்தள்ளி


*********************************************
குகை கடந்த ரயிலுக்குள்ளிருந்த கணம்
சட்டென வெளிச்சம் வருமென சிமிட்டியபடி
இருக்கிறது


*************************************************
கண்ணாடியின்
வரையறுக்கப்பட்ட தூரத்திற்கு அப்பால் 

முகம் பார்க்க எட்டுகிறாய்
போதாதது 

எப்போதும் போதாதிருக்கிறது
உயரமும் தூரமும் பார்வையும்...



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...