சனி, நவம்பர் 03, 2018

மழை பருகிய நாள்

இறக்கிவைத்தவன்
போனபிறகு
அந்த சொற்களைப் பாதுகாப்பாகப் 
பட்டுப் பேழையிலிட்டாய்
திறப்பதற்கு விரல் நீளும்போதெல்லாம் 
ஒரு செம்பருத்தியைக் 
கிள்ளிச்சுற்றிக்கொண்டுதானே நடப்பாய்
இன்றென்ன வந்ததாம்
ஊரெல்லாம் துர்க்கந்தம்


**************************************************************
முன்முற்றச்சிறு வெளியில் 
தேங்கிக்கிடக்கும் நீர் சொல்கிறது மழையை
உதறி உதறி
பிலுபிலுவென ஆடிக்கொண்டிருக்கின்றன 

அடர்வேம்பின் பழங்கள்
வெளி உலகின் மழையைப் பார்க்க 

ஒன்றிரண்டு இறங்கியுமிருக்கலாம்

***************************************************************
தவிட்டுக்குருவி
அணில் வரிசை
முன்பின்னான காக்கை
சோனி நாய் அதன் குட்டி
எல்லாமே உறங்கியாயிற்றா
மழை அரவந்தவிர 

வேறொன்றும் தொனிக்காத முற்பகலில்




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...