செவ்வாய், ஜூன் 11, 2019

எறும்பின் தடம்

ஒரு பூவைக்கூடக் காணோம் 
இந்தக்கிளையில்
வெயில்படா உள்ளிருப்பில்
 கசப்பின் ருசியறியாதோ

*****************************************************
புள்ளிபுள்ளியாய்ப் பூத்துக்கிடக்குது
 பருக்கைசுமந்த
எறும்பின் தடம் 
தரையெங்கும் 
தனக்கு வைத்ததில் 
காக்கை விட்டு வைத்தது சுமந்து
புண்ணிய கணக்கு அதற்குமுண்டோ

*****************************************************
எவ்வளவு முறை அழுதாலும் 
கண்ணீர் அதேகறையாகத்தான் படிகிறது
ஆனாலும் சொல்லத்தான் வேண்டும்
 இப்போதெல்லாம் அப்படியில்லை என்று
அழுந்தத் துடைத்துவிட்டு

*********************************************************
விசுக்கெனக் கடப்பவர்களைப் 
பார்க்கவே கூடாது
அவர்கள் பாட்டுக்கு
இனி பார்க்கவே முடியாதவர்களின் 
ஜாடையை 
பாவத்தை
நினைவூட்டிக் கடந்து விடுகிறார்கள்
*******************************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...