புதன், ஜூன் 12, 2019

அரூப ஈரம்

ஊருக்குப்போனவனுக்கு ஒரு சொல்
எனக்கும் வருத்தம்தான் 
ஆறு சுடுவது
ஆனால் 
அந்த நதி தீரம்
தண்ணீரால் மட்டும் 
ஈரமடைந்திருக்கவில்லை
மதகில் அமர்ந்து 

கதைபேசியிருந்த தோழமையில்
அவர் கண்களில் குடியிருந்த கனவில்
குறைகொண்டவனிடம் காட்டிய பரிவில் 

சேர்த்திருந்த
அரூப ஈரம் அது
இன்று மணல் சுட்டாலும்
புலன்வழி குளிர்மை 

உணர்ந்திருப்பாய் நட்பே



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...