புதன், ஜூன் 12, 2019

உள்ளுக்குள் சுழலும் இசைத்தட்டு

ஒன்று இரண்டு என 
வரிசைப்படுத்தி சுந்தராம்பாள்
ஒலிபெருக்கியில் பாட
திருப்தியடைந்து 
இளமஞ்சள் எலுமிச்சை சாதத்தை
 ரசித்துக்கொண்டிருந்த ஈசனின் 
பல்லில் சிக்கி கடக்'கென்றது
தாளித்தகடலைப்பருப்பில் கிடந்த கல்

நெற்றிக்கண்ணைத்திறக்க
பிறைசூடி தயாரானபோது
சட்டெனக் குறுக்கிட்டுவிட்டார்
மிச்ச எலுமிச்சை சோற்றோடு
தூக்குவாளியை மூடிக்கொண்டிருந்த குருக்கள்

நைவேத்தியப்படியை 
மளிகைக் கடை மூர்த்திதான் அளக்கிறானாம்
சரி,பல்குத்த துரும்பு தேடிக் கொள்கிறேன் 
போ" என்றபடி தொடர்ந்தான் பரமன்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...