செவ்வாய், ஜூன் 11, 2019

அரவப்பொட்டு

ஒவ்வொரு அரளிவிதைக்குள்ளும் 
துருவித்துருவி எடுத்த கசப்பின் துகள்
ஒவ்வொரு அரவமும் 
பொட்டுப்பொட்டாய் வைத்துச்சென்ற 
விஷ இழை
ஒவ்வொரு துளிஒளியுமற்ற
இரவின் பூரணதிகில்
எல்லாவற்றையும் விட
அதிகமதிகமாய்
உன் ஒரு சொல்
********************************************************
நான் என்ன நினைக்கிறேன்
என நினைக்காத உன்னைப்பற்றி
இவ்வளவு நினைக்க நேர்வது
யாருடைய விதி
********************************************************
தெரியும்
இதே பூமியில் ஏதோ ஒரு கோட்டிற்கு 
முன்னோ பின்னோ
உன் பெருக்கலைக் கணக்கிட்டுக் கொண்டிருப்பாய்
கடன்வாங்கிக் கழித்ததை 
மறந்துவிட்டு
வாழ்க்கை எல்லாவற்றையும்
நேர்செய்ய வற்புறுத்தாது
உன்போன்றவரிடம்
************************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...