புதன், ஜூன் 12, 2019

கெட்டித்துப் போன தூரிகை

ஒழுங்குபட்ட வண்ணத்தீற்றல்கள் இல்லை
திடீரென எகிறும் ஆரஞ்சுக்கு அருகே 
கடல்நீலம் நெளிநெளியாக நீள
சாய்வளையங்கள் பச்சையில்
எதற்கென்றே தெரியாது 
குறுக்குமறுக்கில் பிரௌன் கோடுகள்
தலைகீழாக வழிகிறது பொன்மஞ்சள்
ஒவ்வொன்றாகப் பொருள் கேட்காதே
சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்
அதுதான் நான்

******************************************************
வீட்டின் நீள அகலத்துக்குத் தக்க 
திரையில் தீட்ட முடிவதில்லை வாழ்வை
விதிமுறைகளின்படி
சுற்றிலும் இடம்விட்டேன்
மனச்சித்திரத்துக்கேற்ற வண்ணம் 

தோய்த்த தூரிகையைக் கையில் வைத்தபடி
யாருக்கோ பதில் சொல்லித் 

திரும்புவதற்குள் உலர்ந்துவிடுகிறது
கெட்டித்துப்போய்விட்ட தூரிகை 

உதறுவதற்குள் நல்லவேளை
எரிவாயு பதிவுசெய்ய வேண்டுவது 

நினைவுக்கு வந்துவிட்டது
சோறு முக்கியம் சார்





கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...