செவ்வாய், ஜூன் 11, 2019

அவரவர் வழி

குறுக்குமறுக்காக 
போய்க்கொண்டே இருக்கிறது மந்தை
அவற்றோடு சம்பந்தம் இல்லாதவன் போலக் 
கழியைத் தோளில் சார்த்தி 
நடக்கிறான் மேய்ப்பன்
தூக்குவாளிகளோடு பின்னொருத்தி
அவரவர்க்கு அவரவர் வழி

*****************************************************************
பொட்டுமூக்குத்தி போலப் பூத்திருக்கும் 
வயலட் பூவுக்கு ஏற்ற வடிவிலில்லை 
அதன் இலைகள்
இப்படித்தான் நடந்துவிடுகிறது
பலநேரம்

**************************************************************
நிறைந்த பூக்களுள்ள
கிளையாகப் பார்த்து ஒடித்து
சுற்றிப்பின்னி சூட்டப்பட்ட கிரீடமிது
சின்னமுள் கீறலுக்கெல்லாம்
சத்தம் போடாதே
இதோ கைநிறைய இருக்கிறது மீத உதிரி
குருதி கசிந்தால் பார்த்துக்கொள்ளலாம்


************************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...