செவ்வாய், ஜூன் 11, 2019

குமிழ் மூடிய அருவி

ஒளிர்பூங்கண்களின்
சிரிப்பைச் செவிமடுக்க
உன் இரைச்சலை
முழுக்குமிழும் திருகி மூடினாயல்லவா
அப்போது முதல் வீழ்கிறது
இந்த அன்பின் பேரருவி
நதிமூலம்
கண்டடைவாயாக


**********************************************************
தட்டையான பார்வையால்
புரிந்துகொள்ள
முடியாதது
என் வெறித்த நோக்கின் வலிமை
என் வாசல் தும்பையின் அழகு
மற்றும்
அடைத்த கதவத்தினுள் பரவும்
ஒளி


**********************************************************
ஒரு கைப்பிடி பழஞ்சோறு
வைக்கத் தேடுகிறாய்
பூங்குயில் வரிசை

எதிர்மதில் காகம்தான்
இவ்விடம் வரும்
இதனைத்தொடும்
என்பது எப்போது புரியுமோ
*************************************************
பாடம் செய்யப்பட்ட
இலைகள்
பாடம் செய்யப்பட்ட வண்டு
பாடம் செய்யப்பட்ட
மனது
எழுதி முடிக்க வேண்டும்
**************************************************
நின்றுகொண்டே இருக்கிறோம்
பங்கிடப்படாத அன்புக்கு வெளியே
பொங்கி வழியும் குரோதத்தின் எதிரே
இறைந்து கிடக்கும் அலட்சியத்தின் நடுவே
உதிர்ந்து மூடும் புறக்கணிப்பின் அடியில்
கால்கடுக்க
ஏக்கத்தோடு நின்று கொண்டேயிருக்கிறோம்
அவர்கள் கண்ணைக் கட்டியிருக்கும் 
காந்தாரித் திரை விலகாதா என்று


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...