செவ்வாய், ஜூன் 11, 2019

அன்புக்கும் உண்டு அடைக்கும் தாழ்

சொல்ல வேண்டாமென்றுதான்
நானும் நினைக்கிறேன்
உன் சாம்பிய முகமோ
சங்கடமான பாவனையோ 
இன்னும் இறுகிவிடுமாறு எதையும் சொல்ல வேண்டாம்

சுய இரக்கத்தில் 
எவருக்கும் கேட்காவண்ணம் 
என்னவோ சொல்லிக்கொள்ளுவாய்
அந்தக் கன்றல் ,வெளிறல்
என் சொற்களுக்குப்பின்
பிறக்கவேண்டாம்

எதையோ தேடுவதான பாவனையில் 
உள்ளூர் நகைக்கடையின் 
பெயரழிந்து நிறம் மங்கி
முனை மழுங்கிய கைப்பையின்
மூடவியலா உட்பைகளுக்குள்ளேயே 
சில்லறை சரிபார்க்கும் 
உன்னிடம் என்றும் 
சொல்ல வேண்டாம்
அப்படியே குனிந்து 
எவருமறியாது துளிர்க்கும் கண்ணீரைத் 
துடைக்கவைக்கும் சொற்களை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...