செவ்வாய், ஆகஸ்ட் 24, 2021

தூர்ந்த கனவு

 நம்பிக்கொண்டிருந்தோம்

சாய்கிளையிலிருந்து
பன்னீர்ப்பூக்கள்
உதிரும்
எதிர் வீட்டுக் கிணற்றின் உள்ளே தெரிந்த ஓரிரு படிகள் வழிதான்
எங்கள் கதைகளில் உலாவும் தேவதைகள் ஏறி வருவார்கள் என
தெருவுக்கே தேவதையாக உலவிய
அமுதாக்காவை
ஆளும் பேருமாய் கிணற்றில் இறங்கித் தூக்கி வந்தபிறகு
தூர்ந்துபோனது
எங்கள் கனவுகளோடு
கிணறும்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...