செவ்வாய், ஆகஸ்ட் 24, 2021

வலிக்காத பொய்

  

காயமென்று கருதினேன்
கசிவது ரத்தமாக இருக்கும்வரை அஞ்சாதே என்றொரு ஆறுதல்
பிதுங்கும் சீழ் எப்போது கட்டியது எனத் தெரியாமல் காப்பதில்தான்
தன் திறன் இருப்பதாக நிஜம் சொன்னது நிஜம்
வலிக்காத பொய் சொன்னாலென்ன *********************************************


தனக்கு இன்னின்னது பிடிக்கும் என்று
தெளிவாகச் சொல்லிக்கொண்டே இருப்பவர்களால்
குற்றவுணர்ச்சி வந்துவிடுகிறது
இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் பிடித்த உணவைக் கொடுத்திருக்கலாம்
இன்னும் கொஞ்சம்
அதிகநேரம்
பிடித்த மாதிரி பேசியிருக்கலாம்
இன்னும் ஒருமுறை
பிடித்த இடத்திற்கு
அழைத்துப் போயிருக்கலாம்
இன்னும் இன்னும் என்றுதான்
எவ்வளவு முறைக்குப்பிறகும்
தோன்றும் துயர் பெருக்குகிறது
தனது பிடிமானங்களையோ
பிடித்தங்களையோ
பகிராத ஒருவனைப்பற்றியும்
இப்படித்தான் குறைப்படத் தோன்றுவதாக ஒருத்தி சொன்னாள்
திகைப்பாகிவிட்டது
அதெப்படி
கோடி பிரிவினைகளோடு
இருப்பவர்களும்
சாகும்போது
ஒரேமாதிரி
குற்றவுணர்ச்சியைக்
கைகளில் திணித்துவிட்டுப் போய்விடுகிறார்கள்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...