செவ்வாய், ஆகஸ்ட் 24, 2021

மறுபடியும் முதலில் இருந்து

 இந்த உடைகளை

இந்தப் பொருட்களை
இந்த அலைபேசி எண்ணை
இந்த மூக்குக் கண்ணாடியை
இந்த நறுமணக்குழலை
பாதி கரைந்த சோப்பை
எப்போதும் வைத்திருக்கப் போகிறோம்
என்று நினைப்பதற்கும்
எப்போதுவரை
வைத்திருக்கப் போகிறோம்
என்று நினைப்பதற்கும்
நடுவில்
நாட்கள்
மாதங்களோ
ஆண்டுகள்
நடந்து போயிருக்கலாம்
ஆனால்
பிரிந்த வாழ்வின் நினைவுப் பாதையில் கிடப்பது
கூர்முள்
எதுவும் நடக்கவியலாது
************************************
அனிச்சையாய்க் கிள்ளி எறிவதை உணர்ந்தபோது
சுற்றிலும் இறைந்து கிடந்தன
இலைகள்
பத்திரமாய்ப் படர்ந்து கிடந்தன களைகள்
மறுபடியும் முதலில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...