செவ்வாய், ஆகஸ்ட் 24, 2021

அவள்களின் உலகம்

 கால்படி புளியோதரை கிண்டி

வழிச்சோறு தயாரானாலும்
ஒரு கிண்ணம் எதிர்வீடு
ஒரு கிண்ணம் அடுத்த வீடெனத் தூக்கிப் போகிறவள்
திணறித்தான் போனாள்
அத்துவானப் புது வீட்டில்
இப்போது பழகிவிட்டது
எதிர்ப்படும் முகத்தை
சலனமின்றிப் பார்க்க
**************************************
பொன்னாங்கண்ணியை ஆய்ந்து ஆய்ந்து
நகக்கண் நோகும் வேளையிலும்
சமரசமின்றி
தாளிக்க சின்ன வெங்காயம் இருக்கும்
அம்மா
எழவெடுத்த சனியனே
ஏன் என் உயிரை வாங்குற
என்றபடியே
பின்னுமிரண்டு வெங்காயம் உரிக்கிறாள்
ரவோண்டு போட்டா
அந்த சனியனுக்குப் பிடிக்காதென ************************************************
என்ன செய்தால் எனக்கு வலிக்கும்
என்ன சொன்னால் எரியும்
எதைக்கண்டால் மிதப்பேன்
எதன் நுகர்வில் பறப்பேன்
எதுவும் தெரியாதுனக்கு

வியர்வைக் கசகசப்புக்காகக்கூட
நெகிழாத கைத்தலந்தான்
பிரமாதம் பிரமாதம்





கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...