செவ்வாய், ஆகஸ்ட் 24, 2021

மருதநிலத்துக் கொற்றவை

 அப்போதெல்லாம் பார்த்திராத

வெடிப்புரேகைகள் இன்று கண்டேன்.

சேற்றையோ நாற்றையோ சுற்றிக்கிடக்கும் அவள் பாதங்கள்
புடைத்த நரம்புகளோடு
வெளிறிக் கிடக்கின்றன
நகரத்தின் முற்றத்தில்
ஈரமிலா
நரகம் என்று திருத்துகிறாள்
என் பிள்ளைகளின் சேடியான
மருதநிலத்துக் கொற்றவை
வரப்புக்குள் கூட அணியாத செருப்பை
கூடத்துக்குள் அணிந்து சுற்றும்
இந்த ஊரை அப்படித்தான் பார்க்கிறாள்
பேரப்பிள்ளைகளின் கடைவாய் எச்சிலால்
தொண்டை நனைத்துப் பிழைக்கும்
மூதாய்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...