செவ்வாய், ஆகஸ்ட் 24, 2021

பொட்டல அரசியல்

 நல்லதே கெட்டதோ

போட்டிருக்கும்

கீற்றுப்பந்தலின் மேலே கட்டிய கூம்புவழி
இயக்கப் பாடல்களை
காற்றில் பரப்பிக்கொண்டிருந்தது ஒரு தலைமுறை
வீட்டுக்கஞ்சியைக் குடித்துவிட்டு
பொடிநடையாகக் கிளம்பி
பக்கத்து நகரத்தின்
பொதுக்கூட்டம் பார்க்கச் செல்வதும்
கூலியை இழந்து
கிடைத்த வாகனத்தில் தொற்றி
அலங்கார வளைவுகளை வேடிக்கை பார்த்து
ஊர்வல நையாண்டிமேளத்துக்கு
நின்ற இடத்திலேயே சொடக்கு போட்டு ஆடி
பந்தல் மணலில்
தூங்கி
என்ன பேச்சு...என்ன பேச்சு என்றபடி திரும்புகிறவன்
மறுநாள் வேலைத்தலத்தில்
பாடிக்காட்ட கற்று வந்திருப்பான்
முழக்கப் பாடல்களை
குட்டியானைகளும்
இருநூறு ரூபாய்
நோட்டுகளும்
பிரியாணிப் பொட்டலங்களும்
சாராய பாக்கெட்டுகளும்
நிரம்பிவிட்ட அரசியல் பாதைகளில்
கொள்கை முறுக்கேறிய
குரல்களும் அற்றுப் போயின
காலம் மாறட்டும்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...