புதன், நவம்பர் 10, 2021

ஆத்தா

 எதற்கென்றும் இல்லாமல்

புன்னகைத்தபடியே இருக்கிறாள் ஆத்தா
முகமே அப்படியாகிவிட்டது
பிடித்த நிறச்சிற்றாடை கட்டி சிரிக்க நினைத்தது
பிடித்தவனைக் கட்டி
சிரிக்க நினைத்தது
மழலைகளோடு
சிரிக்க நினைத்தது
எதுவும் நடந்ததா தெரியாது
கரகரவென்று சாம்பலையள்ளி கரிப்பாத்திரம் தேய்க்கவே பிறந்தது போலக்
கடந்த
ஆண்டுகளும்
தேய்ந்த
கைகளும் கூட நினைவின்றி
சிரித்துக் கொண்டிருக்கிறாள்
அவ்வப்போது எதையோ
சரிபார்ப்பது போலக் கையை விரித்தபடி
வீட்டில் சாவு விழுந்தாலும் சிரித்தபடி இருக்கும்
ஆத்தாவை
வையும் உறவுகளுக்கும்
இல்லாமலில்லை
என்றாவது ஒருநாள்
சிரித்துவிடும் ஆசை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...