திங்கள், நவம்பர் 01, 2021

எல்லாம் எமக்குத் தெரியும்

 ஒன்றுவிட்ட சித்தப்பா

பெரியப்பாக்களைக் கண்ட உலகில்
இனி
புதிய உறவு
ஒன்றுவிட்ட சக பயணி என்று அமையலாம்
கொரோனா
சிதம்பரம் மாமாவாட்டம்
ஒவ்வொரு வார்த்தைக்கும் தாவித்தாவி
முதுகு தட்டாது போல.
ஒன்று விடுவதால்
உங்களை விடுவேனா
என்றொரு சிரிப்பு
அரங்குகளின் திரை விலகுமுன்
டால்பி டிஜிட்டலில் கேட்கலாம்
எட்டுமணிக்குமேல்
கோயிலுக்கும்
பதினொரு மணிக்குமேல்
கடைத்தெருவுக்கும்
வரவிருக்கிறதாமே
கொரோனா பல்லக்கு
முகத்திரையோடுதான்
ஆராதிக்க சென்றேன்
அபிஷேகப் பாலருந்த
அரை தொன்னை
பொங்கலுண்ண
இறக்கிவிட்டு இறக்கிவிட்டு
கிளம்பும்போதுதான்
தோன்றியது
வேண்டுதலை வைத்தபோது
இறக்கிவிட்டு முகம் காட்டவில்லையேயென
குழம்பிவிட மாட்டாரா சுவாமி

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...