திங்கள், நவம்பர் 01, 2021

வேரைக் கிள்ளுதல்

 கண்ணாடி முன் நின்று கொண்டிருக்கிறான்

நேரங்கெட்ட நேரத்துல என்ன அழகு பாத்தாவுது
வேலை ஓட்டத்தில்
ஒரு கேள்வியை வீசுகிறாள் வீட்டரசி
கேலியா எரிச்சலா ஆய்வுக்குள் போகாது நிற்கிறான்
கண்ணாடிக்குள் கடைத்தெரு
திடுமெனப் பார்த்த
ஊர்க்காரன்
கொப்புளித்து எழும்பிய நினைவுகளோடு
கைகுலுக்கத் தொடங்கி
எண் பகிர்ந்து
தோள்தழுவி நகர்ந்த பின்னா
முன்னா
எப்போதோ ஓடியது
எந்த தெருக்காரன் என்ற ஒருஇழை...
அழித்தேன்
அழித்தேன் என்றதை
அழித்தேனா இல்லையா
அந்த கணம் தன்முகம் எப்படி இருந்திருக்கும்
கண்ணாடிக்கு அவ்வளவு திறமை போதவில்லை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...