புதன், நவம்பர் 10, 2021

சமாதானம் சமாதானம்

      நீயாகத்தான் நினைத்துக் கொள்கிறாய்

குட்டி போட்ட நாய் போல
அங்குமிங்கும் அலைந்து
தேடுவது
ஒரு பதிலை
தட்டித்தடவி தவதாயப்பட்ட பின்
கிடைத்தது
பதிலா
சமாதானமா என்று
அடையாளம் காணவியலா
தாழ்சர்க்கரைக்குப்
போய்விடுகிறாய்
நிதானம் மீள்கையில்
சமாதானம்தான் பதில்
என்ற சமாதானத்துக்கு வந்துவிடுகிறாய்
குறைந்தபட்சம்
இன்னொருமுறை
குட்டிபோடும் வரையாவது *********************************************

எப்போதாவது
நீங்களும் சொல்லியிருப்பீர்கள்
போதும் போதும் இன்னிக்கி ரொம்ப சிரிச்சாச்சு
ரொம்ப அழும்போதோ
ரொம்ப திகைக்கும்போதோ
ரொம்ப ஆத்திரப்படும்போதோ
வராத மனத்தடை சிரிப்புக்கு
நமக்கே உள்ளே
இருக்கிறதுபோல
சிரிப்பு அந்நியம் என்று
மலர்ச்சி அந்நியம்
என்ற விதி மாம்பூக்களையும் விடுவதில்லை
பாருங்கள் *******************************************





கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...