புதன், நவம்பர் 10, 2021

யதாஸ்தானம்

 மரணம்

எங்கே உட்கார்ந்திருக்கும்
அரட்டையடிக்க தோதாக விடலைகள் அமரும்
ஊர் மதகுகளில் வந்து உட்கார்ந்து
நிலவொளியில்
பேரேடு திருப்புமா
பழைய அரைவேட்டியை
முண்டாசாக்கி
அலக்குக்குச்சியை
ஊன்றுகோலுமாக்கி
கண்மறைத்து
ஆடு எண்ணும் மேய்ப்பனிடம்
எண்ணிக்கை பழகுமா
கிறீச்சு கிறீச்சென
பழைய துருவியில்
வளைத்து வளைத்து
ஒட்டதுருவியெறிந்த
கொட்டாங்குச்சி சாய்ந்து கிடக்க
தேங்கிய கோடைமழையைப் பருகி தாகசாந்தி பெற்றபடி
அன்று உடைபடப்போகும்
பானைகளுக்காகக்
காத்திருக்குமா
இடம் தெரிந்தால்
நாக்கைப் பிடுங்கும்படி
நாலு கேள்வி கேட்கலாம்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...