திங்கள், நவம்பர் 01, 2021

நிலைத்த சித்திரம்

 இங்கே ஒரு கடையில் தயிர்வடை பிரமாதமா இருக்குமே

நீளும் பாதையில்
நினைவின் சுவையரும்பு விழிக்கிறது...
ஜாங்கிரி சூடா போட்டுத்தந்தாரே அந்த கடையா
சக சுவையரும்பு சப்புக்கொட்டியது..
ஊரே மாறிக்கிடக்கு
இருக்கோ என்னவோ...
இருந்தது

கண்ணாடிப்பெட்டிக்குப் பின்னால்
வடையும்
பக்கவாட்டில்
திருநீறு குங்குமத்தோடு வெங்கடாசலபதியும்
நுனிமழுங்கிய பொத்தல் விழுந்த மர மேசையுமாக
வந்து சென்ற நாளின் சித்திரத்திலிருந்து
உயிர்பெற்றவன் போல
ஒருவன் வருகிறான்
கொழுந்துமாறா
வாழை இலைத்துண்டுகளோடு

*****************************************************
யாரோ யாருக்கோ
இரங்கல் எழுதியிருக்கிறார்கள்
யாரென்றே தெரியாத அவர் என்னவாக இருந்தார்
பார்க்க
அவர் பக்கம் போகிறேன்
தன் பக்கத்தைப் பூட்டி வைத்திருக்கிறார் அவர்
கடமையே கண்ணாக அடுத்த பிறந்தநாளிலும்
யாராவது வாழ்த்து சொல்லக்கூடும்
பூட்டிய வீட்டுக்கு வெளியே
வளர்ப்புப்பூனை போல்
அண்ணாந்து பார்த்தபடி அதுவும் நிற்கக்கூடும்
**********************************************************


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...