புதன், ஆகஸ்ட் 19, 2020

கொரோனா கவிதைகள்

 அப்படியாம் இப்படியாம் என்றபோது 

வரக்கூடாது என்று வேண்டினேன்

தொண்டை கமறியபோது 

இருக்கக் கூடாது என்று வேண்டினேன்

சோதனைக்குக் கொடுத்துவிட்டு 

எண்ணிக்கையில் 

சேர்ந்துவிடக்கூடாது என வேண்டினேன்


மருத்துவமனையில் காத்திருக்கும்போது
நல்ல கழிப்பறை இருக்கவேண்டுமே 

என வேண்டினேன்


வேண்டாமலே கிடைத்திருக்கிறது 

சன்னலோரப் படுக்கையும்
ஒரு துண்டு வானமும்
பிழைத்துவிடுவேன்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...