புதன், ஆகஸ்ட் 19, 2020

கொரோனா கவிதைகள்

 கிழக்கிலிருந்து மேற்காகத் திரும்பும் 

சந்திலிருந்து பணி முடித்து 

ஒரு காவலர் கிளம்புகிறார்

என்ன இங்கே
எதிரில் வரும் சக காவலர்
தெற்கிலிருந்து கிழக்காக 

தட்டி அடைக்கவிருப்பதாகச் 

சொல்லி நகர்கிறார்


வடக்கிலிருந்து தெற்காக 

ஏற்கனவே அடைபட்ட தெருவில் 

வெறித்த பார்வையுடன் 

அமர்ந்திருக்கும் தொப்பிக்காரருக்கு 

ஒரு வெளிறிய புன்னகையை வீசிவிட்டு
தானே நகர்த்திக் கொள்கிறார் 

தடுப்புக் கம்பியை


அடுத்து போடணும்னா
கம்பியெல்லாம் இல்லை
பக்கத்து நாற்காலியில்
அமர்ந்தவாறே
அலுத்துக்கொள்கிறவர்
ஒப்பந்த தாரராயிருக்கலாம்
சுற்றிச்சுற்றி வந்துவிட்டு
வேற வழியில்லியா சார் எனத்தவிக்கிறான்
லாரிக்காரன்

நான் இங்க உக்காந்திருக்கணும் 

அவ்வளவுதான் தெரியும்பா

உட்கார்ந்திருக்கவும் ஆளில்லாத 

தகரத்தடுப்பின் முன் 

முட்டி நிற்கிறது ஒரு குட்டியானை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...