புதன், ஆகஸ்ட் 19, 2020

கொரோனா கவிதைகள்

 ஒரு சிக்கலுக்கு

ஓராயிரம் தீர்ப்புகள்

காய்ச்சலா
உடனே ஓடு சோதனைக்கு

இரு இரு முன்பின் காய்ச்சல் வந்ததில்லையா
நாலுநாள் பாரசிடமால் போடு

க்கும் எல்லாம் மாத்திரையா
இஞ்சி,மஞ்சள்,மிளகு,பூண்டு,சீரகம்,துளசி எடு எடு

என்ன அலட்சியம்
எத்தனை நாளாய்ப் பரப்புகிறாய்
ஓடு சோதனைக்கு

சோதனை கொடுத்துவிட்டாயா ஒழுங்காய் வீடுசேர்

சோதனைதந்துவிட்டு வெளியிலா
மூச்
இங்கேயே கிட
திறந்துவிட்டால் போகலாம்

வாவாவா...
தாசில்தார், போலீஸ் கார் எல்லாம் வாங்க 

கூண்டைப்போட்டு அமுக்குங்க

தெருவை மூடுனியா
சுத்திமுத்தி வளைச்சு தட்டி கட்டு
கொரோனா அந்த வீட்டை விட்டு
எகிறி குதிச்சு ஓடிராம 

இருபத்துநாலு மணிநேரத்துக்கும் ஆள் போடு

என்னசார் பதினாலுநாளா
அது அப்போ
அப்ப இப்ப
பத்துநாள் போதும்

அவனுக்கு ஒண்ணுமில்ல வீட்டுக்குத்துரத்து
ஏழுநாள்தானே ஆகுது
அதான் ஒண்ணுமில்லன்னு சொல்றேன்ல
சார் பதினாலுன்னீங்க
பத்துன்னீங்க
இப்ப..
யோவ் வர்ரவனுக்கு இடம் வேணும்யா
எனக்கு சோறு வேணும் சார்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...