புதன், ஆகஸ்ட் 19, 2020

கொரோனா கவிதைகள்

 துக்கத்துடன் ஒருத்தி

அரற்றிக் கொண்டிருக்கிறாள்
ஆம்புலன்சில் ஏற்றியதை வீடியோ எடுத்து 

பக்கத்து வீட்டுக்காரர் 

சுற்றுக்கு விட்டிருப்பதாக


இன்னொருத்தி சொல்கிறாள்
எங்க வீட்டைத் தாண்டும்போது 

முந்தானையால் முகத்தைப் 

பொத்திக்கிறாங்களாம்


வேறொருத்தி கண்ணீர் உகுத்தாள்
அவசரத்தில் 

பூனைக்குட்டியை உள்ளேயே விட்டு 

வீட்டைப் பூட்டிவிட்டேன்


எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்ட வீட்டுச்சுவர்கள்
ஊரெங்கும் நீள்கின்றன


எண்ணிக்கையில் ஒன்றாக மாறிவிடும்போது
என்னென்னவோ நடக்கிறது

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...