புதன், ஆகஸ்ட் 19, 2020

கொரோனா கவிதைகள்

 எதுவும் தெரியவில்லை எங்களுக்கு

யார் யாரைக் கொல்கிறார்கள்
யாருக்கு மன அழுத்தமாகவுள்ளது
யார் துன்புறுத்துகிறார்கள்
யார்நிவாரணம் சொல்கிறார்கள்
யாருக்குகோபம் வருகிறது
யார் பசியில் சாகிறார்கள்
எதுவுமில்லை இந்த உலகில்


தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களைக்கொண்டு 

கட்டமைக்கப்பட்ட உலகம் இது

காய்ச்சல்
தலைவலி
இருமல்
சளி
பாரசிடமால்
இவற்றைத்தான் சொல்கிறோம்
முனகுகிறோம்
முறையிடுகிறோம்


ஆறுதல் தருகிறார்கள்
நிறைய தண்ணீர்குடி 

எல்லாவற்றையும் விழுங்கு


இரவு பகல் காலை மாலை 

எதுவுமில்லா இவ்வுலகின் 

இரண்டே பொழுது
மருத்துவர் வரும்பொழுது
செவிலியர் வரும்பொழுது
அவ்வளவுதான்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...