புதன், ஆகஸ்ட் 19, 2020

கொரோனா கவிதைகள்

 கழிச்சல்ல போவ

எனச் சிரித்துக்கொண்டே பாராட்டுவாள் 

ருக்கு பெரியம்மா
பெரியப்பாவிடம் அந்தரங்கத்திலும் 

அதையே சொல்வாளோ 

எனச்சிரிக்கும் கூட்டு


அதுவே சண்டையென்றால் 

தெரு அதிர
ஒன்ன மாரியாயி கொண்டுபோவ
நீ கொள்ளையில போவ
கூவுவாள்


மாரியாயி கொண்டு போவதெல்லாம் 

நின்று கனகாலமாகியும் 

அவளுக்கு கொஞ்சவும் வையவும் 

பதங்கள் மாறவில்லை


வாதம் பேச்சைப் பறித்துக்கொண்டுவிட
கொரோனா காலத்தைச் 

சேர்த்துக்கொள்ள முடியாது 

கிடக்கிறாளாம் பெரியம்மா

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...