புதன், ஆகஸ்ட் 19, 2020

கொரோனா கவிதைகள்

 இங்கெல்லாம் பெய்யக்கூடாது என்று 

இந்த மழைக்குத் தெரியவில்லை

இங்கெல்லாம் மின்னக்கூடாது
இங்கெல்லாம் இடிக்கக்கூடாது
இங்கெல்லாம் வீசக்கூடாது 

எதுவும் தெரியாமல் 

அதது பாட்டுக்கு நடக்கிறது


அட இந்த பூனைக்குட்டி ....

இங்கெல்லாம் வரக்கூடாது எனத்தெரியாமல்
இரண்டாம் மாடியின் 

சன்னல் நீட்டங்களில் 

தாவித்தாவி வருகிறது

ஒரு சொட்டுபால் விடமுடியாத 

எங்கள்மேல் எந்த வன்மமும் 

அதற்கில்லை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...