புதன், ஆகஸ்ட் 19, 2020

கொரோனா கவிதைகள்

 முகக்கவசம்

நூறு ரூபாய்க்கு அஞ்ச வைக்கிறது

பதினைந்து தையல் போட்டு 

பத்து ரூபாய்த் தோரணங்களாக
சாலையெங்கும் தொங்குகிறது

விலையேற விலையேற
காப்பதில் அந்தஸ்து பேதத்தை 

அழகாய்ப்பேணி 

தனியுடைமைக் கோட்டை மேல் பறக்கிறது
கொடியசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததால் கொடியசைந்ததா

காதற்ற ஊசியும் வாராக் 

கடைவழிப்பயணம் 

தள்ளிப்போடுவதற்கான முயற்சியில்

 நாடாக்கள் காதுகளை 

அறுத்துக் கொண்டிருக்கின்றன.

கழுதை காதுகள் 

ராஜாக்களைக் காட்டிக்கொடுக்க
அவிழ்த்தெறிந்த கவசங்கள் 

கட்டமைக்கின்றன கவிழ்ந்த வானத்தை

துடைப்பங்களில் 

முடிக்கொத்தாக சிக்கி ஆடும் 

முகக்கவச நாடாக்களை
மகள் கூந்தலின் சிடுக்காக எடுத்து சுருட்டி எறிகிறாள்
கைக்காப்பற்ற ஒப்பந்த சேவையாளி

திரையா கவசமா 

எது சரியெனத்

 திணறிக் கொண்டிருக்கிறேன் நான்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...