புதன், ஆகஸ்ட் 19, 2020

கொரோனா கவிதைகள்

 முகக்கவசத்திடம்

தோற்ற உலகத்திலும்
முகக்கவசமே காப்பு

சோப்புக்குமிழ்களைத் தோற்கடித்த உலகிலும்
சோப்புக்குமிழே துணை

கிருமிநாசினிகள்
பொருளற்றுப் போன உலகிலும்
கிருமிநாசினியே
பற்றுதல்


உங்கள் அலைபேசிகளில் 

தொடங்குவதுபோல் இல்லை 

எங்கள் இருமல்
உங்கள் அச்சத்தைப் போலில்லை 

எங்கள் காய்ச்சல்


ஓரத்தில் ஒரு கிழவர் 

குரோதமாகப் பார்த்துக் கொண்டிருக்க 

அவரைக் கேலி செய்தபடி 

குத்துப்பாட்டு பாடுகிறான் ஒரு இளைஞன்


காலையில் சஷ்டி கவசமும்
வடிவேலு காமெடியும் 

சரிக்குசரி மல்லு கட்டுகின்றன


இங்கு வந்தும்
மாமியாரைப் பராமரிக்கும் வேலை

தொடரும் ஆத்திரத்தில்
காறிக்காறித் துப்பிக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி


படுக்கைகள் நிரம்பும் வேகத்தில் 

வாழ்க்கையும் கலைந்து கிடக்கிறது

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...