புதன், ஆகஸ்ட் 19, 2020

கொரோனா கவிதைகள்

 ஒரு குறுமிளகளவு

சளி வந்து நிற்கும்
ஓரு கனைப்பில் 

அது கரைந்து போகும்


தொண்டைக்குள்ளாகவே நடக்கும் 

இந்த சம்சாரத்தை
சந்தேகக்கண்ணோடு நோக்குகிறாராம்

 எல்லோரும்
அலுத்துக்கொண்டார் சித்தப்பா


இன்னிக்கி நேத்திக்கா இருக்கு என் தும்மல்
நாலு செம்பருத்தி கையில் கிள்ளுமுன் 

துருத்திவரும் அரைத்தும்மல்
முந்தானையில் அமுக்கிவிட்டுக்கொண்டு 

ஆயிரம் வேலை பார்ப்பேன்


எப்பலேருந்து தும்முற
எப்பலேருந்து
பிறந்ததுல இருந்துன்னுதானே 

சொல்ல முடியும் 

சிரிக்கிறாள் அத்தை


இருக்கா இல்லையா
தனியா வைத்தா தாங்கணுமே


இல்லையென்ற முடிவுதான் 

எளிதாக இருக்கிறது எல்லோருக்குமே

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...