புதன், ஆகஸ்ட் 19, 2020

கொரோனா கவிதைகள்

 அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ

ஒலித்துக்கொண்டே இருக்கிறது
காய்ச்சலில் கண்திறக்காது கிடப்பவனின் அலைபேசி

காய்ச்சல் விட்ட களைப்பில் துயில முற்படும் 

பக்கத்துப் படுக்கைக்காரனின்
திடுக்கிடலுக்கு ஒவ்வொரு முறையும் காரணமாகிறது
அண்ணாத்த ஆடுறார்

எங்கு வைத்திருக்கிறானெனத் தெரியாது
தொட்டுத் துழாவவும் முடியாது 

எல்லாக்கண்களும் விழித்திருக்கின்றன
அவன் விழிக்க
ஐந்து நிமிடங்களுக்கொருமுறை
அண்ணாத்த ஆடுறார்.

இந்தப்பக்கம் ஒருத்தி 

கொஞ்சிப்பேசிட வேண்டாம் வைத்திருக்கிறாள்

சரியாக ஒவ்வொரு பத்தாவது நிமிடமும் ஒலிக்கிறது 

கொஞ்சிப்பேசிட வேண்டாம்
முகக்கவசத்துக்கும் மேலாகக்கை வைத்து மறைத்து 

சுவர்ப்பக்கம் திரும்பி பேசிவிட்டு
சுருண்டு கொள்கிறாள்

நள்ளிரவு வரை பொறுத்து
அதைக்கொஞ்சம் மாற்றேம்மா என்று 

மற்ற படுக்கையெல்லாம் மண்டியிட்டன
எனக்குத்தெரியாது
அவரைத்தான் கேக்கணும்


சுருண்டுகொண்டாள்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...