புதன், ஆகஸ்ட் 19, 2020

கொரோனா கவிதைகள்

 குறும்புச்சிரிப்போடு ஓடும் பாப்புவின் 

கன்னம்வழித்து முத்தமிட்டு 

மூன்று மாதங்களாயின


இருட்டிக்கொண்டு வரும் 

சம்பளமற்ற எதிர்காலம் குறித்துக் குமுறிய 

தோழியின் முதுகணைத்துக் 

கண்ணீர் துடைக்கத் தவித்த 

விரல்களை 

வெறுமனே நெட்டிமுறித்தபடி 

வறட்டுச்சொற்களைப் பெய்திருந்தேன்


தொட்டுக்கொண்டதெல்லாம் சோப்பு
சோப்புத்திரவம்
கிருமிநாசினி


காதலின்தொடுகை 

மறந்து போன கைகள்
இருபதுநொடிகளில் 

எதையும் அலசப்பழகிக்கொண்ட கைகள்


காயை,பழத்தை,பால் பாக்கெட்டை,அலச 

எத்தனை வித்தைகள்


நீ தொடமுடியாத தூரத்திலிருப்பதை 

உறுதிசெய்தபடியே ஊர்ந்த நொடிகள்
எல்லாம் தாண்டி 

எப்போது தழுவினாய்....
உனது லட்சம்கோடி நகங்களின் 

நுனிபட்ட நொடி எது...

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...