வியாழன், ஜனவரி 13, 2022

கையுறையணிந்த கடவுள்கள்

      மாணவப்பருவத்திலிருந்தே அவர்களுக்கு வேறு கடிகாரம்

அது 48
72 மணிநேரங்களைக் கொண்டது
அவர்கள் உணவு
அவர்கள் உறக்கம்
உங்கள் கையில்தான்
அறுவை சிகிச்சை அரங்குகளுக்கு வெளியே
நாம் கையைப்பிசைந்து கொண்டு
காத்திருக்கையில்
கையுறையோடு பரபரத்து இயங்கும் அந்தக் கைகள்
கடவுளின் கைகள்
அளவாய் இருக்கிறீர்களா என்று எண்களால்
கண்களால் அறிந்துகொள்ளும்
வித்தைக்காரர்கள்
காதலால் பேசாத இதயங்களின்
லப் டப் உரையாடல் அவர்கள் காதுகளுக்கு மட்டும் கேட்கும் சரியான மொழியில்
இப்போதெல்லாம்
ஏற்ற இறக்கங்களை
மாற்றி அமைத்து
பழுது நீக்கும் பொறியாளனாக உங்கள் உடலைத் தட்டிக்கொடுக்கிறார்கள்
உலகையே ஆட்டிப்படைக்கும்
பெருந்தொற்றுகளிலும்
ஒளிந்துகொள்ளாத
தொண்டர்குலம் அது
கவசங்களைப் பழகிக்கொண்டு
காத்திருப்பைப் பழகிக்கொண்டு
கண்ணீர்,வியர்வை காட்டிக்கொள்ளாது
நேரத்துக்கு உண்
அடக்காது கழிப்பறை செல்
என்று ஊருக்குச்சொல்வதை
தன் உடம்புக்குச் செய்யாது
ஓடும் யோகிகளால்
வாழும் வரம் நமக்கு
அலைகளை வெல்லும் இந்த ஆயுதங்களை
உங்கள் முறை என்னவோ அப்படி வணங்குங்கள்
கை தொழலாம்
நெடுஞ்சாண்கிடையாக நெற்றி
நிலத்தில் படலாம்
பரிசு தர விரும்பி
என்ன வேண்டும் எனக்கேட்டால்
சொன்ன பேச்சைக் கேளுங்க அது போதும்
என்பார்கள் அம்மாவாகி
எம் தேசத்தீரே
நன்றிசொல்ல
நல்லவழி உண்டு
லட்சியங்களை மட்டுமே பற்றி உயர்ந்து
வெள்ளைக் கோட்டுக்குள் புகுந்த
எம் தலைமுறை வழி
லட்சங்களை அறியாத பாதங்களும்
நடக்க வழிவிடுங்கள்
நீட்' ஆன நெடுஞ்சுவர் இடித்து.


 




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...